சுங்கை புலோ மருத்துவமனைக்கு 150 படுக்கைகளை நன்கொடையாக வழங்கினார் பேரரசி

மாட்சிமை தங்கிய பேரரசி, துங்கு ஹஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியா அவர்கள், சுங்கை புலோ மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக 100 படுக்கைகளையும், கோலாலம்பூர் மருத்துவமனைக்கு மேலும் 50 படுக்கைகளையும் நன்கொடையாக வழங்கினார்.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா முகநூல் (பேஸ்புக்) மூலம் அவருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.

“சுங்கை புலோ மருத்துவமனைக்கு 100 படுக்கைகளையும், கோலாலம்பூர் மருத்துவமனைக்கு 50 படுக்கைகளையும் பங்களித்து, நன்கொடையாக வழங்கிய பேரரசியார் அவர்களுக்கு சுகாதார அமைச்சு எங்களின் நன்றியையும் மரியாதையையும் தெரிவிக்க விரும்புகிறது”.

“இது, நாட்டிற்காக தொடர்ந்து போராட சுகாதார ஊழியர்களுக்கு ஒரு வலுவான உந்துதலைத் தந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஜொகூர் முழுவதும் மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக 42 வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கிய ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தாரையும் நூர் ஹிஷாம் வாழ்த்தியுள்ளார்.