கோவிட்-19: மேலும் ஓர் இறப்பு, 134 புதிய பாதிப்புகள், 168 பேர் குணமடைந்துள்ளனர்

கோவிட்-19 தொற்றுநோய் மலேசியாவில் மற்றொரு உயிரைக் கொன்றுள்ளது. இதனால் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக இருக்கிறது.

இன்று தனது செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 134 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து, மொத்தமாக பதிவு செய்யப்பட்ட தொற்றுநோய்களின் எண்ணிக்கை 4,817 என தெரிவித்தார்.

குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 168 ஆகும். இது மொத்த குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கையை 2,276 அல்லது 47.3 சதவீதமாகக் கொண்டுள்ளது.

77வது இறப்பு (‘நோயாளி 2797’) 62 வயதான மலேசிய நபர். இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் வரலாறு கொண்டவர். நோயாளி கோலாலம்பூர் ஸ்ரீ பெட்டாலிங்கில் நடந்த ஒரு தப்லீக் கூட்டத்தில் பங்கேற்றவர் ஆவார். 13 ஏப்ரல் 2020 அன்று காலை 9:15 மணிக்கு இறந்துவிட்டதாக உறுதி செய்யப்படுவதற்கு முன்பு இவர், 31 மார்ச் 2020 அன்று மலாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.