நோ ஒமர் மீண்டும் சிலாங்கூர் அம்னோ தலைவராகிறார்

மாட் நட்ஸரி அகமட் தஹ்லானுக்குப் பதிலாக, தஞ்ஜோங் காராங் எம்.பி. நோ ஒமர் மீண்டும் சிலாங்கூர் அம்னோ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

14வது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் அம்னோவின் படுதோல்வியைத் தொடர்ந்து, ராஜினாமா செய்வதாக நோ 30 ஜூன் 2018 அன்று அறிவித்தார். அவர் அப்பதவியை 2013ஆம் ஆண்டு முதல் வகித்திருந்தார்.