69 புதிய பாதிப்புகள், 1 இறப்பு, 39 பேர் குணமடைந்துள்ளனர்

மேலும் 69 நோயாளிகள் கோவிட்-19க்கு நேர்மறையாக சோதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,071 ஆகும்.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளில், 12 இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 57 உள்ளூர் நோய்த்தொற்றுகள் என்றுள்ளார்.

சமீபத்திய இறப்பு, மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 103-ஆக கொண்டுவந்துள்ளது.

37 நேர்மறை பாதிப்புகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றன, அவற்றில் 14 பாதிப்புகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

மொத்தம் 39 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து மீண்டு வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4,210 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

சமீபத்திய இறப்பு, புற்றுநோயின் வரலாற்றைக் கொண்ட 66 வயதான மலேசிய நபர் சம்பந்தப்பட்டது என்று நூர் ஹிஷாம் கூறினார்.

“கோவிட்-19 நேர்மறை பாதிப்பு (‘நோயாளி 4818’) உடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு வரலாறு உள்ளது.

“அவர் ஏப்ரல் 14, 2020 அன்று, கோலாலம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் ஏப்ரல் 30, 2020 அன்று மாலை 4.00 மணிக்கு அவர் இறந்துவிட்டார்” என்று அவர் கூறினார்.