சிங்கப்பூரில் தடை உத்தரவு நீட்டிப்பு

சிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், 17 ஆயிரம் பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து, சிங்கப்பூர் வந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, அதிக அளவில், தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மே, 4 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள், அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததை அடுத்து, அவர்களுக்கான ஊரடங்கை, இம்மாதம், 18 வரை நீட்டித்து, அரசு உத்தரவிட்டது.

dinamalar