அரண்மனையின் விசாக தின வாழ்த்து

விசாக தினத்தை முன்னிட்டு மாட்சிமை தங்கிய பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசி, துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா, இன்று நாட்டின் அனைத்து பெளத்தர்களுக்கும் விசாக தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பு பல்வேறு இனங்கள் மற்றும் நம்பிக்கைகளைக் கொண்ட அனைத்து மலேசியர்களுக்கும் புதிய சவால்களைக் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையில் ஒரு புதிய சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது என்றனர்.

“பெளத்த மதத்தின் இந்த அர்த்தமுள்ள நாள், புதிய நடைமுறைகளுடன், சுய பாதுகாப்பு, குடும்பம் மற்றும் சமூக பாதுகாப்பின் முக்கியத்துவத்துடனும் கொண்டாட வாழ்த்துகிறோம்.”

“இந்த சவாலை எதிர்கொள்வதில் பொறுமையாக இருங்கள்; கோவிட்-19 தொற்றுநோயை ஒன்றாக எதிர்த்துப் போராடுவதில் உங்கள் பங்கை அளித்து உதவுங்கள்” என்று அவர்கள் ஒரு பதிவில் தெரிவித்தனர்.