பிரதமர்: பி.கே.பி.பி ஜூன் 9 வரை தொடர்கிறது

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.பி) ஜூன் 9 வரை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றுடனான கலந்தாலோசனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

“சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனையின் பேரில், பி.கே.பி.பி மே 12 முதல் ஜூன் 9 வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்க விரும்புகிறேன், இது 4 வாரங்கள் தொடர உள்ளது” என்று அவர் இன்று ஆர்டிஎம் நேரடி ஒளிபரப்பு வழியாக ஒரு சிறப்பு செய்தியில் தெரிவித்தார்.