ஜோகூர் சட்டமன்றம் அசல் நிகழ்ச்சி நிரலின் படி அமைதியாக முடிந்தது

ஜோகூர் சட்டமன்றம் அசல் நிகழ்ச்சி நிரலின் படி அமைதியாக முடிந்தது

குழப்பம் மற்றும் சண்டைகள் ஏற்பட்ட மலாக்கா மற்றும் பேராக் மாநில சட்டமன்றங்களுடன் ஒப்பிடும்போது, ஜோகூர் மாநில சட்டமன்றம் இன்று அமைதியாக தோன்றியது.

பெரிகாத்தான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் தரப்பினர் அரசியல் ஆட்டங்களில் ஈடுபடக்கூடாது என்ற அரச ஆணையை பின்பற்றி, ஜொகூர் மாநில சட்டமன்றம் இன்று அசல் நிகழ்ச்சி நிரலில் கூட்டத்தை சுமூகமாக முடித்தது. அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இந்த நேரத்தில் 2019 கொரோனா கிருமி தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்துவதாகக் கூறியது.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தாரின் கட்டளைக்கு கட்டுப்படுவதை உறுதி செய்வதாகவும், கோவிட்-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் மக்களுக்கு உதவ ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் ஜோகூர் மந்திரி புசார் ஹஸ்னி முகமது கூறினார்.