ரைஸ், இட்ரிஸ், ஜாஹித் ஆகியோர் செனட்டர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

அடுத்த செவ்வாயன்று பதவியேற்கவுள்ள ஐந்து புதிய செனட்டர்களில் முன்னாள் அம்னோ அமைச்சர்கள் ரைஸ் யாத்திம் மற்றும் ராட்ஸி ஷேக் அகமது ஆகியோரும் அடங்குவர்.

அரசியல் வட்டாரங்களிடையே வலம் வந்த இப்பட்டியலை, சட்டமன்றத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தினார்.

பட்டியலின் படி, மற்ற மூன்று செனட்டர்கள் பாஸ் துணைத் தலைவர் இட்ரிஸ் அகமட், பாஸ் ஆதரவாளர் (DHPP) தலைவர் என்.பாலசுப்பிரமணியம் மற்றும் டாக்டர் மகாதிர் முகமதுவின் முன்னாள் அரசியல் செயலாளர் முகமது ஜாஹித் அரிப் ஆகியோர் அடங்குவர்.

இந்த ஐந்து பேரும் பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங்கால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு இவர்கள் பதவியேற்க உள்ளனர்.

ஜூன் 22 திங்கட்கிழமை மேலும் நான்கு செனட்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் விக்னேஸ்வரன் மலேசியாகினியிடம் தெரிவித்தார். இருப்பினும், அவர் அந்த செனட்டர்களின் பெயர்களை வெளியிடவில்லை.