1MDB உடன் இணைக்கப்பட்ட RM194 மில்லியனை திரும்பப் பெற்றது அம்னோ குழு

1MDB தொடர்பாக அரசு தரப்பின் மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், அம்னோ மற்றும் பிற மூன்று தரப்புகளும் RM194 மில்லியனை மீண்டும் பெற்றுள்ளன.

நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை ஒத்தி வைக்குமாறு தொடரப்பட்ட அரசு தரப்பின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது.

முன்னதாக பிப்ரவரி 7 ஆம் தேதி, 1 எம்.டி.பி-யிலிருந்து RM194 மில்லியன் தொகையை பறிமுதல் செய்யக் கோரி அம்னோ, வனிதா எம்.சி.ஏ, பெரானோ நிறுவனம், மற்றும் பினாசாபி நிறுவனத்திற்கு எதிரான வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

அம்னோவிலிருந்து RM192 மில்லியனையும், வனிதா எம்.சி.ஏ-விலிருந்து RM300, 000, பெரானோவிலிருந்து RM337, 634, 78 மற்றும் பினாசாபியிலிருந்து RM777, 250 தொகையை திரும்பப் பெற அரசு தரப்பு முயன்றது.