மாட் சாபு: அமானா கட்சி தொடர்ந்து பாக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும்

மக்களின் ஆணையை மீட்டெடுக்கவும், மத்திய அரசை மீண்டும் கைப்பற்றி வழிநடத்தவும் பக்காத்தான் ஹராப்பான், பெர்சத்துவின் அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகமது மற்றும் வாரிசான் கட்சியுடன் அமானா கட்சியும் இணைந்து இருக்கும் என்று அமானாவின் தலைவர் முகமட் சாபு வலியுறுத்தினார்.

பாக்காத்தான் கூட்டணியில் அமானா கட்சியும் ஒரு உறுப்பினராக இருக்கும் என்று அவர் கூறினார்.

“மக்களின் நல்வாழ்வுக்காகவும் நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் பாக்காத்தான் கூட்டணியில் நிலைத்திருக்கும் உறுதிப்பாட்டை இன்று காலை நடந்த அமானா தலைமைக் குழு கூட்டத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.”

“14வது பொதுத் தேர்தலில் வழங்கப்பட்ட மக்கள் ஆணை மற்றும் மக்கள் உரிமைகளை திரும்பப் பெற, துன் மகாதீர் முகமட் மற்றும் அவரது குழு, வாரிசான் மற்றும் பாக்காத்தானின் பொறுப்பு என்பதை அமானா உறுதிப்படுத்துகிறது” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அனைத்து பாக்காத்தான் கூறு கட்சிகளும் திடீர் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் முகமட் சாபு வலியுறுத்தினார்.