குடிநுழைவு தடுப்பு முகாமில் இந்திய பிரஜை மரணம், காரணம் ஆராயப்படுகிறது

கோவிட்-19க்கு சிகிச்சை பெற்ற சில நாட்களில், கடந்த வாரம் புக்கிட் ஜாலீலில் உள்ள குடிநுழைவு தடுப்பு முகாமில் இறந்த இந்திய சுற்றுலாப் பயணியின் மரணம் குறித்து சுகாதார அமைச்சு பிரேத பரிசோதனை நடத்தியுள்ளது.

இருப்பினும், மரணத்திற்கான காரணத்தை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், ஆய்வக அறிக்கைகளுக்காக காத்திருப்பதாகவும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர், சென்னையைச் சேர்ந்தஜமாலுதீன் ஜீவ்தீன் என்று அறியப்படுகிறார். ஜூன் 14 அன்று செய்தி அறிக்கைகள் மூலம் அவரது குடும்பத்தினர் அவர் இறந்ததைப் பற்றி அறிந்தனர். ஒரு நாள் கழித்து, கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம் ஜீவ்தீனின் மரணத்தை உறுதிப்படுத்தியது.