கோவிட்-19: 3 புதிய பாதிப்புகள், ஒன்பது மீட்புகள்

மூன்று புதிய கோவிட்-19 பாதிப்புகள் மட்டுமே இன்று பதிவாகியுள்ளன. இது மலேசியாவில் மொத்த நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,590 ஆகக் கொண்டு வந்துள்ளது.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இரண்டு பாதிப்புகள் மலேசிய குடிமக்கள் அல்லாதவர்கள் மற்றும் ஒரு மலேசியர் சம்பந்தப்பட்ட பாதிப்பும் பதிவாகியுள்ளதாகக் கூறினார்.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு நோய்த்தொற்றுகள் எதுவும் இன்று பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.

நாட்டில் தொற்று பாதிப்புகளின் விவரங்கள் பின்வருமாறு:

  • நெகேரி செம்பிலன் – பெடாஸ் திர¨ளையில் ஒரு மலேசியர் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட பாதிப்பு

  • சபா – ஒரு மலேசியர் மற்றும் ஒரு மலேசியர் அல்லாதவரும் சம்பந்தப்பட்ட இரண்டு பாதிப்புகள்

“ஒன்பது பாதிப்புகள் இன்று மீட்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றன என்பதை சுகாதார அமைச்சு (MOH) தெரிவிக்க விரும்புகிறது.”

“கோவிட்-19 இலிருந்து முழுமையாக மீட்கப்பட்ட மற்றும் வார்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 8,186 அல்லது மொத்த பாதிப்புகளில் 95.3 சதவீதம் ஆகும்” என்று அவர் கூறினார்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) மூன்று நேர்மறையான பாதிப்புகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாச உதவி தேவையில்லை என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

“கோவிட்-19 தொடர்பான இறப்புகளில் அதிகரிப்பு இன்று அறிவிக்கப்படவில்லை. ஆகவே, மலேசியாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 121 அல்லது மொத்த பாதிப்புகளில் 1.41 சதவீதமாக உள்ளது” என்று அவர் கூறினார்.