அதிரும் அமெரிக்கா – 35 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

சிகிச்சை பெறும் நோயாளிகள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 65 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ளது.

ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5.80 லட்சத்தை கடந்தது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.34 கோடியை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் இன்று ஒரே நாளில் மீண்டும் 65 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தை நெருங்குகிறது.

malaimalar