கோவிட் – 19 : இன்று 862 புதியத் தொற்றுகள்

இன்று மதியம் வரை, நாட்டில் 862 கோவிட் – 19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

சபாவில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில், 673 புதியத் தொற்றுகள் பதிவாகிய நிலையில், சிலாங்கூரில் 132 -ஆக உயர்ந்துள்ளது.

இன்று, 634 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத் தலைமை இயக்குநர், டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதற்கிடையே, 95 நோயாளிகள் அவசரப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், 29 பேருக்குச் சுவாசக் கருவி தேவைப்படுவதாகவும் நூர் ஹிஷாம் சொன்னார்.

இன்று, 3 மரணங்கள் நேர்ந்துள்ளதாகவும், அவை அனைத்தும் சபாவில் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சபா , சிலாங்கூரைத் தவிர்த்து, இன்று பதிவாகியப் புதியத் தொற்றுகள் :-  கெடாவில் 17, பேராக்கில் 9, பினாங்கில் 8,கோலாலம்பூரில் 7, லாபுவான் மற்றும் நெகிரி செம்பிலானில் 6, புத்ராஜெயா, ஜொகூர் மற்றும் கிளந்தானில் 1 .