பினாங்கு கொடி மலை ரயில் சேவை ஜனவரி 9 முதல் 15 வரை நிறுத்தப்படும்

பினாங்கு கொடி மலை ரயில் சேவை பராமரிப்பு, சோதனை நடவடிக்கைகளுக்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதிலியிலிருந்து 15ம் தேதி வரை- அதாவது ஏழு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும்.

வழக்கமாக நடத்தப்படும் அந்த ஆண்டு பராமரிப்பு வேலைகளுக்குப் பின்னர் அந்த ரயில் சேவை வழக்கம் போல் நடத்தப்படும் என பினாங்கு ஹில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் விற்பனை, மேம்பாட்டுப் பிரிவு நிர்வாகி ஆன் கோ கூறினார்.
 
“பொது மக்கள் அல்லது சுற்றுப்பயணிகள் கொடி மலைக்குச் செல்வதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம். பூமலையிலிருந்து செல்லும் ஜீப் பாதை, மலையில் ஏறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள பாதை ஆகியவையே அந்தப் பாதைகள்,” என அவர் இன்று ஜார்ஜ் டவுனில் விடுத்த அறிக்கை கூறியது.

அந்த ரயில் சேவைகளுக்கான நேரங்கள், ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவற்றை பொது மக்கள் www.penanghill.gov.my என்னும் இணையத் தளத்திற்குச் சென்றும் அறிந்து கொள்ளலாம்.

பெர்னாமா.