கோவிட் 19 : இன்று 659 புதியத் தொற்றுகள் பதிவு

நாட்டில், இன்று 659 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

529 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கின்ற நிலையில்; ஜொகூர், மலாக்கா மற்றும் பெர்லிசில் புதிய தொற்றுகள் ஏதும் பதிவாகவில்லை என்றும் அவர் சொன்னார்.

அவசரப் பிரிவில் 83 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 19 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று 1000 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், புதிய திரளைகள் எதுவும் இன்று கண்டறியப்படவில்லை என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 54, நெகிரி செம்பிலானில் 25, லாபுவானில் 12, கோலாலம்பூரில் 11, சரவாக்கில் 9, பேராக்கில் 6, புத்ராஜெயாவில் 4, கெடா, பினாங்கு மற்றும் திரெங்கானுவில் தலா 2, பஹாங் மற்றும் கிளந்தானில் தலா 1.