கோவிட் 19 : இன்று 1,247 புதிய நேர்வுகள், ஜொகூரில் பாதிப்புகளின் எண்ணிக்கையில் உயர்வு  

சுகாதார அமைச்சு இன்று, 1,247 புதிய கோவிட் -19 நேர்வுகளும் 3 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய பாதிப்புகளில் 48.8 விழுக்காடு கிள்ளான் பள்ளத்தாக்கைச் சார்ந்தது, அடுத்த நிலையில் சபாவில் 18 விழுக்காடு, ஜொகூரில் 16.4 விழுக்காடு எனப் பதிவாகியுள்ளது.

அதேவேளையில், 1,441 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 47 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று மூவர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். லாஹாட் டத்து மருத்துவமனை, சுங்கை பூலோ மருத்துவமனை மற்றும் சண்டகான் கேண்ட் மருத்துவமனையில் தலா ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

கெடா, திரெங்கானு மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 461, சபாவில் 225, ஜொகூரில் 205, கோலாலம்பூரில் 140, நெகிரி செம்பிலான் 89, பேராக்கில் 55, பினாங்கில் 25, மலாக்காவில் 14, பஹாங்கில் 11, லாபுவானில் 8, புத்ராஜெயாவில் 7, கிளந்தானில் 4 மற்றும் சரவாக்கில் 3.

மேலும் இன்று, 4 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

காஸ்சியா டைமண்ட் திரளை – சிலாங்கூர், கிள்ளான், கோல லங்காட், உலு லங்காட், கோம்பாக் & கோல சிலாங்கூர் மற்றும் பினாங்கு, பாராட் டாயா மாவட்டம்; பொம்போட் திரளை – சபா, கோத்த பெலுட் & குடாட் மாவட்டம்; கியாரா கட்டுமானத்தளத் திரளை – கோலாலம்பூர், கெப்போங் மாவட்டம்; பெர்காசா கட்டுமானத் தளத் திரளை – கோலாலம்பூர், செராஸ் மாவட்டம்.