கோவிட் 19 : இன்று 4,214 புதிய நேர்வுகள், அவசரப் பிரிவில் 316

நாட்டில் இன்று, 4,214 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களில் 5,000-க்கும் அதிகமான எண்ணிக்கைகளை எட்டியப் பின்னர், இன்று தொற்று சிறிது சரிவைப் பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், பத்து இறப்புகள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

4,280 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 137 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- சிலாங்கூர் (1,362), ஜொகூர் (1,068), கோலாலம்பூர் (702), சபா (276), பேராக் (193), பினாங்கு (119), சரவாக் (105), நெகிரி செம்பிலான் (91), மலாக்கா (85), கிளாந்தான் (57), பஹாங் (54), கெடா (47), திரெங்கானு (38), புத்ராஜெயா (10), லாபுவான் (7).

மேலும் இன்று 14 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 9 திரளைகள் பணியிடம் சார்ந்தவை.