யுனிசெஃப் : செப்டம்பர் முதல் வேலையின்மை இரு மடங்காக அதிகரித்துள்ளது

ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் குறைந்த வருமானம் பெறும் நகர்ப்புற மக்களிடையே, வேலையின்மை விகிதம் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது.

கோலாலம்பூரில் குறைந்த விலை குடியிருப்பில் உள்ள 500 வீடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில், வேலையின்மை விகிதம் செப்டம்பர் மாதத்தில் 7 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாக (டிசம்பர்) உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டது.

வீட்டில் மூன்று பெரியவர்களில் ஒருவர் வேலையில்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஃபேமிலிஸ் ஆன் தி எட்ஜ்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், குடும்பத் தலைவர்களாகப் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீட்டு வருமான அளவு, 2019-ஆம் ஆண்டு இறுதியில் இருந்ததை விட, இப்போது முறையே 24 மற்றும் 36 விழுக்காடு குறைவாக உள்ளது.

“ஆய்வு மாதிரியில், வறுமை விகிதம் டிசம்பரில் 42 விழுக்காடாக இருந்தது, ஊனமுற்றோர் (55%) தலைமையிலான வீடுகளிலும், பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் (61%) அதிக விகிதத்திலும் உள்ளன,” என்று கூறப்பட்டுள்ளது.

மலேசியாவின் யுனிசெஃப் பிரதிநிதி, ரஷீத் முஸ்தபா சர்வார் கூறுகையில், சில குடும்பங்கள் மீண்டுவரத் தொடங்கினாலும், மற்றவர்கள் பி.கே.பி. 2.0 மீண்டும் நடைமுறைக்கு வந்த பின்னர், மீண்டும் ஆரம்ப நிலைக்கேத் தள்ளப்பட்டுள்ளனர்.

மலேசியாவில், மிகவும் பாதிக்கப்படக்கூடியக் குழுக்களுக்கானச் சமூகப் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம், இதில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிதி உதவியை விரிவுபடுத்துதல், தவறான நபர்களுக்கு, குறிப்பாக சுயதொழில் செய்பவர்களுக்கு வாழ்வாதார ஆதரவை வழங்குதல் போன்றவை அடங்கும்.

மோசமான சூழலில் வாழும் குடும்பங்களுக்கு அரசாங்க நிதி உதவி இருந்தபோதிலும், 63 விழுக்காடு வீடுகளில், அடிப்படை மற்றும் தினசரி தேவைகளை வாங்குவதில்கூட சிரமம் உள்ளது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

இதற்கிடையில், மலேசியாவைச் சேர்ந்த ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (யு.என்.எஃப்.பி.ஏ) பிரதிநிதி, நஜிப் அஸ்ஸிஃபி மேலும் கூறுகையில், மோசமடைந்துவரும் பொருளாதாரத்தைத் தொடர்ந்து குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் சமூக நிலைமை தொடர்ந்து மாறுகிறது என்றார்.

“மனநலத்தை மோசமாக்கும் அவநம்பிக்கை அதிகரிப்பதன் மூலம், அது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைச் சூழலை உருவாக்கத் தொடங்கும்.

“குழந்தைகள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களை மதிக்கிறவர்களைவிட வேறு யாரும் அதிகம் பாதிக்கப்படுவதில்லை” என்று அவர் மேலும் கூறினார்.