ரோஸ்மா விடுவிக்கப்படுவாரா, தற்காப்புக்காக அழைக்கப்படுவாரா? – பிப்ரவரி 18-ல் தீர்ப்பு

முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர், RM187.5 மில்லியன் கையூட்டு கோரிய ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவாரா அல்லது தற்காப்புக்கு அழைக்கப்படுவாரா என்பது பிப்ரவரி 18-ல் அறியப்படும்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி மொஹமட் ஸய்னி மஸ்லான், இன்று அரசு தரப்பு மற்றும் பாதுகாப்பு குழுவினரிடமிருந்து வாய்வழி வாதத்தைக் கேட்ட பின்பு, அத்தேதியை நிர்ணயித்தார்.

நஜிப் ரசாக்கின் மனைவியான ரோஸ்மாவை, ஜக்ஜித் சிங் மற்றும் அக்பெர்டின் தலைமையிலான வழக்கறிஞர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீ ராம் அரசு தரப்பு குழுவுக்குத் தலைமை தாங்கினார்.

கல்வி அமைச்சின் நேரடி பேச்சுவார்த்தை மூலம், சரவாக்கில் உள்ள 369 கிராமப்புறப் பள்ளிகளுக்கு RM1.25 பில்லியன் மதிப்புள்ள சூரிய மின்சக்தி திட்டங்களைப் பெற உதவுவதற்காக, ஜெபக் ஹோல்டிங்ஸ் சென். பெர். (Jepak Holdings Sdn Bhd) நிர்வாக இயக்குநர் சைடி அபாங் சம்சுடினிடமிருந்து RM187.5 மில்லியனைக் கோரியதற்காக மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளை ரோஸ்மா எதிர்கொள்கிறார்.

2016 மற்றும் 2017-க்கு இடையில், சைடியிடமிருந்து RM6.5 மில்லியன் கையூட்டு வாங்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.