இன்று 3,499 புதிய நோய்த்தொற்றுகள், செயலில் உள்ள வழக்குகள் சற்று குறைந்தன

கோவிட் 19 | நாட்டில் இன்று, இன்று நண்பகல் வரை மொத்தம் 3,499 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 51,558 செயலில் உள்ள பாதிப்புகள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன, நேற்று இருந்ததை விட 21 குறைவு.

இன்று ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன, ஜனவரி 18-க்குப் பிறகு மிகக் குறைந்த தினசரி பதிவு இதுவாகும். ஆக, நாட்டில் இதுவரை இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 958.

இன்று 3,515 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 118 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1345), ஜொகூர் (802), கோலாலம்பூர் (511), சரவாக் (152), பினாங்கு (138), பேராக் (121), கெடா (111), சபா (101), நெகிரி செம்பிலான் (58), மலாக்கா (50), திரெங்கானு (46), கிளந்தான் (44), பஹாங் (13), புத்ராஜெயா (3), லாபுவான் (2), பெர்லிஸ் (2).