இன்று 2,176 புதிய நோய்த்தொற்றுகள், 10 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று, நண்பகல் வரை மொத்தம் 2,176 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த எண்ணிக்கையில், மொத்தம் 1,618 நேர்வுகள் மலேசியர்களும் 557 நேர்வுகள் மலேசியர் அல்லாதவர்களும் சம்பந்தப்பட்டது.

ஜனவரி 5-க்குப் பிறகு, மிகக் குறைந்த புதிய தினசரி நேர்வுகள் இன்று பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், இன்று மேலும் 10 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் சிலாங்கூரில் ஐந்து, கோலாலம்பூரில் இரண்டு, சபா, ஜொகூர் மற்றும் பேராக் ஆகிய இடங்களில் தலா ஒன்று அடங்கும். மரணித்த அனைவரும் மலேசியர்கள்.

இன்று, 10 பணியிடத் திரளைகள் உட்பட, 13 புதியத் திரளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, 4,521 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 112 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

பெர்லிஸ் மற்றும் லாபுவானில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (910), ஜொகூர் (269), சரவாக் (246), கோலாலம்பூர் (182), நெகிரி செம்பிலான் (145), சபா (97), பினாங்கு (91), பேராக் (83), திரெங்கானு (53), கெடா (33), கிளந்தான் (31), பஹாங் (15), மலாக்கா (14), புத்ராஜெயா (7).