இன்று 2,461 புதிய நோய்த்தொற்றுகள், கிளாந்தானில் பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,461 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேலும், 8 நோயாளிகள் இன்று மரணமடைந்துள்ளனர். இது மரண எண்ணிக்கையை 1,051 -ஆக உயர்த்தியுள்ளது. இறந்தவர்கள் அனைவரும் மலேசியர்கள் என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

இன்று 4,782 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 207 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 91 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

லாபுவானில் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1001), கிளாந்தான் (257), ஜொகூர் (233), கோலாலம்பூர் (230), சரவாக் (134), சபா (109), பேராக் (108), கெடா (101), நெகிரி செம்பிலான் (89), பினாங்கு (87), பஹாங் (42), மலாக்கா (32), திரெங்கானு (22), புத்ராஜெயா (13), பெர்லிஸ் (3).

இன்று கண்டறியப்பட்ட 10 புதியத் திரளைகளும் பணியிடம் சார்ந்தவை. ஜொகூரில் 4, சிலாங்கூர் மற்றும் பேராக்கில் தலா 2, சபா மற்றும் நெகிரி செம்பிலானில் தலா ஒரு புதிய திரளையும் பதிவாகியுள்ளன.