இன்று 1,448 புதிய நோய்த்தொற்றுகள், 5 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,448 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் 45.9 விழுக்காடு, ஜொகூரில் 18.9 விழுக்காடு, சரவாக்கில் 13.7 விழுக்காடு புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இன்று ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன – சிலாங்கூரில் இரண்டு மற்றும் சபா, ஜொகூர் மற்றும் மலாக்காவில் முறையே ஒரு மரணம் பதிவாகியுள்ளது. பலியானவர்கள் அனைவரும் மலேசியர்கள்.

இதற்கிடையில் இன்று 2,137 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 72 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று புத்ராஜெயாவிலும் லாபுவானிலும் புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (561), ஜொகூர் (273), சரவாக் (199), கோலாலம்பூர் (103), பினாங்கு (99), பேராக் (83), சபா (54), கெடா (20), கிளந்தான் (19),  மலாக்கா (11), நெகிரி செம்பிலான் (10), திரெங்கானு (8),  பெர்லிஸ் (7), பஹாங் (1).

இன்று 5 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 2 பணியிடம் சார்ந்தவை.