இன்று 1,470  புதிய நோய்த்தொற்றுகள், 3 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,470 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று 3 இறப்புகள் சம்பவித்து, மொத்த உயிரிழப்பு  எண்ணிக்கையை 1,206-ஆக உயர்த்தியுள்ளதாகவௌம் அவர் சொன்னார்.

“சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் திரெங்கானுவில் தலா ஒரு மரணம் நேர்ந்துள்ளன. மரணமடைந்த அனைவரும் மலேசியர்கள்.

“அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சுகாதார அமைச்சு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது,” என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

இதற்கிடையில், இன்று 1,830 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 70 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (551), சரவாக் (222), பினாங்கு (178), கோலாலம்பூர் (158), ஜொகூர் (101), பேராக் (72), சபா (71), கிளந்தான் (40), பெர்லிஸ் (29), திரெங்கானு (14), கெடா (13), பஹாங் (8), நெகிரி செம்பிலான் (6),  புத்ராஜெயா (4), மலாக்கா (2),  லாபுவான் (1).

இன்று கோலாலம்பூரிலும், ஜொகூர், நூசாஜெயாவிலும் தலா ஒரு புதியத் திரள் கண்டறியப்பட்டுள்ளது, இரண்டும் பணியிடம் சார்ந்தவை.