வாக்கு 18 : நாளை நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம், பி.எச். இளைஞர் அழைப்பு

வாக்களிக்கும் வயதை 18-ஆகக் குறைப்பது மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவு குறித்த தேர்தல் ஆணையத்தின் (இ.சி) முடிவை எதிர்த்து, பக்காத்தான் ஹராப்பான் இளைஞர் பிரிவு நாளை நாடாளுமன்றம் முன் அமைதி போராட்டத்தில் இறங்கவுள்ளது.

பி.எச். இளைஞர் அணி தலைவர் ஷஸ்னி முனீர் மொஹமட் இத்னின், நாளை நடைபெற திட்டமிட்டுள்ள அப்போராட்டத்தில் இணைய அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

“பிற்பகல் இரண்டு மணி தொடங்கி, கடுமையான செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு இணங்க அந்தக் கூட்டம் நடைபெறும்.

“இப்போராட்டம் அனைத்து இளைஞர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் ஓர் குரலாக எதிரொலிக்கும், இளையர்களின் உரிமைகளை நசுக்கும் நாசவேலைகாரர்கள் மற்றும் #PNipu முயற்சிகளையும் இது தகர்த்தெறியும்,” என்று அவர் சொன்னார்.