இன்று 2,331 புதிய நேர்வுகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் 1,007 நேர்வுகள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,331 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த எண்ணிக்கையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் 1,007 நேர்வுகள் பதிவாகியுள்ளன.

சிலாங்கூர் 751 நோய்த்தொற்றுகளுடன் முன்னிலையில் உள்ளது.

சிலாங்கூர் மற்றும் சபாவில் தலா இரண்டு மரணங்கள், சரவாக்கில் ஒரு மரணம் என இன்று மேலும் ஐந்து மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆக, நாட்டில் இத்தொற்றிற்குப் பலியானவர் எண்ணிக்கை 1,370 உள்ளது.

இன்று 1,832 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 225 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 92 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

திரெங்கானுவில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (751), சரவாக் (512), கோலாலம்பூர் (252), கிளந்தான் (225), சபா (163), பினாங்கு (116), ஜொகூர் (100), நெகிரி செம்பிலான் (89), கெடா (45), பேராக் (42), பஹாங் (20), மலாக்கா (9), புத்ராஜெயா (4), லாபுவான் (2), பெர்லிஸ் (1).

இன்று 8 புதியத் திரளைகள் கண்டறியப்பட்ட வேளையில், 7 திரளைகள் நிறைவடைந்ததாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 4 பணியிடத் திரளைகள், 3 பள்ளி அல்லது கல்வி நிறுவனம் சார்ந்த திரளைகள் மற்றும் ஒரு சமூகத் திரளை இன்று புதிதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளன.