இன்று 2,776 புதிய நேர்வுகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் 1,023

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,776 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது, அதில் 1,023 நேர்வுகள் கிள்ளான் பள்ளத்தாக்கில் புகாரளிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இன்று 13 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு பலியானவர் எண்ணிக்கை 1,449-ஆக உயர்ந்துள்ளது. புதிய இறப்புகள் சிலாங்கூர் (3), சரவாக் (6), சபா (2), கிளந்தான் (1), ஜொகூர் (1).

இன்று 1,803 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 133 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (762), சரவாக் (615), கிளந்தான் (343), ஜொகூர் (309), கோலாலம்பூர் (254), பினாங்கு (123), நெகிரி செம்பிலான் (112), சபா (88), பேராக் (45), கெடா (39), பஹாங் (34), மலாக்கா (34), திரெங்கானு (9), புத்ராஜெயா (7), லாபுவான் (2).

இதற்கிடையே, இன்று 13 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன.