இன்று 3,332 புதிய நேர்வுகள், 15 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 3,332 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளது.

சிலாங்கூர் தொடர்ந்து 1,083 நோய்த்தொற்றுகளுடன் அதிக எண்ணிக்கையைப் பதிவு செய்தது, தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக அங்கு 1,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், இன்று 15 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் ஒருவர் வெளிநாட்டினர். இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,492 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 1,943 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 309 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 142 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

லாபுவானில் இன்று புதியத் தொற்றுகள் ஏதும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1083), சரவாக் (522), கிளந்தான் (401), கோலாலம்பூர் (359), ஜொகூர் (207), பினாங்கு (158), சபா (131), நெகிரி செம்பிலான் (111), கெடா (105), பஹாங் (92), பேராக் (91), மலாக்கா (43), திரெங்கானு (19), புத்ராஜெயா (9), பெர்லிஸ் (1).

மேலும் இன்று, 12 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன.