இன்று 2,881 புதிய நேர்வுகள், 15 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 2,881 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய நோய்த்தொற்றுகளில், 1000-க்கும் மேற்பட்டவை கிள்ளான் பள்ளத்தாக்கில் பதிவாகியுள்ளன.

புதிய நோய்த்தொற்றுகளில் 90.56 விழுக்காடு மலேசியர்களையும், 9.44 விழுக்காடு அந்நிய நாட்டவரையும் கண்டுள்ளது.

இதற்கிடையில், இன்று 15 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் 1,521 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 2,462 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 337 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 176 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (759), சரவாக் (445), கிளந்தான் (442), கோலாலம்பூர் (315), ஜொகூர் (310), பினாங்கு (133), கெடா (111), நெகிரி செம்பிலான் (89), சபா (64), பேராக் (64), மலாக்கா (54), பஹாங் (47), திரெங்கானு (42), லாபுவான் (3) மற்றும் புத்ராஜெயா (3).

இன்று 14 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன.