வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து- 26 பேர் பலி

வங்காளதேசத்தில் படகுகள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

டாக்கா, வங்காளதேசத்தில் உள்ள பிரம்மாண்ட நதிகளில் ஒன்றான பத்மா நதியில் சென்ற இரண்டு படகுகள் மோதிக்கொண்டதில் 26 பேர் உயிரிழந்தனர்.  இன்று காலை பங்களாபஜார் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகும், மணல் ஏற்றிவந்த மற்றொரு படகும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காணாமல் போனதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். படகில் அதிக பயணிகள் சென்றது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வங்காளதேசத்தில் படகு பயணங்களின் படகு பயணங்களின் போது போதுமான பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காததால் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கானோர் விபத்தில் உயிரிழக்கின்றனர்.

dailythanthi