இன்று 6,075 புதிய நேர்வுகள், 46 மரணங்கள்

கோவிட் 19 | சுகாதார அமைச்சு இன்று 6,075 கோவிட் -19 புதிய நேர்வுகளை அறிவித்துள்ளது.

மேலும், இன்று 46 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 2,040 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 3,516 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 303 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2,251), ஜொகூர் (699), கோலாலம்பூர் (660), கெடா (445), கிளந்தான் (441), சரவாக் (323), பேராக் (220), திரெங்கானு (203), நெகிரி செம்பிலான் (189), பினாங்கு (183), சபா (160), பஹாங் (150), மலாக்கா (122), லாபுவான் (14), புத்ராஜெயா (9), பெர்லிஸ் (6).