இன்று 6,320 புதிய நேர்வுகள், 50 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 6,320 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

தொடர்ந்து நான்காவது நாளாக, புதிய நேர்வுகள் 6,000-ஐத் தாண்டியுள்ளது.

இதற்கிடையில், இன்று 50 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 2,199 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 4,694 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 370 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1647), சரவாக் (749), கோலாலம்பூர் (654), கிளந்தான் (613), ஜொகூர் (477), நெகிரி செம்பிலான் (396), பினாங்கு (359), கெடா (301), பேராக் (276), பஹாங் (227), சபா (189), திரெங்கானு (185), மலாக்கா (175), லாபுவான் (36), புத்ராஜெயா (18), பெர்லிஸ் (18).

மேலும் இன்று, 15 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.