இன்று 8,290 புதிய நேர்வுகள், 61 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 8,290 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

புதிய நேர்வுகளின் எண்ணிக்கை 8,000-ஐ தாண்டுவது இதுவே முதல் முறை. மூன்று நாட்களாக எண்ணிக்கை 7,000-இல் இருந்ததை அடுத்து, இன்று அது 8,000-ஐ தாண்டியுள்ளது.

இதற்கிடையில், இன்று 61 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. ஆக, இப்போது தேசிய இறப்பு எண்ணிக்கை 2,552 ஆக உள்ளது.

இன்று சம்பவித்த 61 இறப்புகள், சிலாங்கூர் (19), நெகிரி செம்பிலான் (8), கோலாலம்பூர் (6), கெடா (5), சரவாக் (4), ஜொகூர் (4), பேராக் (3), மலாக்கா (3), லாபுவான் ( 2), பினாங்கு (2), கிளந்தான் (2), திரெங்கானு (2) மற்றும் சபா (1) எனப் பதிவாகியுள்ளன.

இன்று 4,814 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 808 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 403 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2052), கிளந்தான் (851), கோலாலம்பூர் (830, ஜொகூர் (762), சரவாக் (698), கெடா (544), நெகிரி செம்பிலான் (520), பினாங்கு (421), பேராக் (405), மலாக்கா (380), சபா (308), பஹாங் (254), திரெங்கானு (207), புத்ராஜெயா (44), பெர்லிஸ் (8), லாபுவான் (6).

மேலும் இன்று, 21 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 6 பணியிடத் திரளைகள் ஆகும்.