இன்று 9,020 புதிய நேர்வுகள், 98 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 9,020 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதற்கிடையில், இன்று 98 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 2,650 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 5,527 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 844 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 430 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2,836), கிளந்தான் (907), நெகிரி செம்பிலான் (898), கோலாலம்பூர் (789), சரவாக் (726), கெடா (468), ஜொகூர் (468), பினாங்கு (345), மலாக்கா (340), பேராக் (272), சபா (265), லாபுவான் (253), பஹாங் (216), திரெங்கானு (189), புத்ராஜெயா (29), பெர்லிஸ் (19).