மஇகா தேசியத் தலைவர் ச விக்னேசுவரனுக்கு உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வாழ்த்து

10-வது மஇகா தேசியத் தலைவராக, மீண்டும் போட்டியின்றி தேர்வு பெற்ற விக்னேசுவரன் சன்னாசி அவர்களுக்கு உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் தமது வாழ்த்துக்களைப் பதிவு செய்வதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்

மலேசியத் தமிழினத்தின் தாய் கட்சியான மஇகாவின் அடிமட்ட தொண்டனாக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, எத்தனையோ சவால்களைக் கடந்து, கட்சியின் பலவீனமான சூழ்நிலையிலும் தன்மான சிங்கமாகத் தலைமையேற்று, கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அதிரடி மாற்றங்கள் வழி, மஇகாவைப் பலமான ஒரு கட்சியாக அவர்  உருமாற்றியிருக்கிறார் என்பதே உண்மை என்றார் பாலமுருகன்.

அதிலும் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவரானாலும், அவர்களுக்குச் சமுதாயத் தலைவனாகத் தன்னலமற்றச் சேவையை வழங்குபவராகவும்; தமிழ் மொழி, தமிழர் இனம், தமிழ்ச் சமயம், தமிழர் பண்பாடு போன்ற தமிழியல் பற்றியங்களின் மீட்சிக்கு அரணாகவும் துணையாகவும் அரசியல் வழியாகவும், அரசியலுக்கு அப்பாற்பட்ட வழியிலும் செயலாற்றி வருவதைக் கண்டு நாங்கள் வியக்கிறோம் என ஓர் அறிக்கையில் அவர் சொன்னார்.

இதுபோல, எந்த அரசியல் கட்சிகளின் சமுதாயத் தலைவர்களானாலும், தமிழர் இன எழுச்சிக்குக் கட்சிகளைக் கடந்து பணியாற்ற வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கும் என்றும் அவர் கூறினார்.

மீண்டும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மஇகாவின் தேசியத் தலைவருக்கு உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வாழ்த்துகளைப் பதிவு செய்வதாக பாலமுருகன் வீராசாமி தெரிவித்துக் கொண்டார்