இன்று 6, 239 புதிய நேர்வுகள், 37 % சிலாங்கூரில்

கோவிட் 19 | கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் மொத்தம் 6,239 கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த எண்ணிக்கையில், 2,291 நேர்வுகள் (37 விழுக்காடு) சிலாங்கூரில் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், இன்று 75 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,611 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 7,386 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 905 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 453 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2,291), கோலாலம்பூர் (704), நெகிரி செம்பிலான் (507), ஜொகூர் (468), சரவாக் (419), கிளந்தான் (340), சபா (232), பஹாங் (232), லாபுவான் (200), பினாங்கு (194), பேராக் (175), திரெங்கானு (171), மலாக்கா (150), கெடா (135), புத்ராஜெயா (17), பெர்லிஸ் (4).

மேலும் இன்று, 15 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.