6,045 புதிய நேர்வுகள், பேராக்கில் நேர்வுகள் அதிகரிப்பு

கோவிட் 19 | இன்று நாட்டில், 6,045 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

2-ஆம் கட்டத்திற்குள் நுழையும் தருவாயில், பேராக்கில் புதிய நேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும், இன்று 63 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 5,497 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில் இன்று, 5,271 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 917 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 443 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று பெர்லிஸில் புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2,262), கோலாலம்பூர் (616), நெகிரி செம்பிலான் (531), ஜொகூர் (500), பேராக் (384), சரவாக் (365), கெடா (332), மலாக்கா (290), சபா (228), பினாங்கு (173), கிளந்தான் (124), பஹாங் (95), லாபுவான் (75), திரெங்கானு (54), புத்ராஜெயா (16).

மேலும் இன்று, 17 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 11 பணியிடத் திரளைகள் ஆகும்.