7,097 புதிய நேர்வுகள், பஹாங் 2-ஆம் கட்ட அளவுகோல்களில் தோல்வியுற்றது

கோவிட் 19 | இன்று நாட்டில், 7,097 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும், இன்று 91 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 5,768 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில், ஜூலை 5-ம் தேதி, தேசிய மீட்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்த பஹாங், அதிலிருந்து பின்வாங்கியுள்ளது

இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற, 206-க்கும் குறைவான புதிய தினசரி எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டிய நிலையில், அம்மாநிலத்தில் புதிய நேர்வுகளின் ஏழு நாள் சராசரி எண்ணிக்கை 224-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று, 4,863 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 948 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 441 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (3,119), கோலாலம்பூர் (1,005), நெகிரி செம்பிலான் (788), மலாக்கா (358), சரவாக் (289), பஹாங் (258), சபா (244), ஜொகூர் (224), கெடா (198), பேராக் (187), பினாங்கு (140), கிளந்தான் (123), லாபுவான் (93), திரெங்கானு (43), புத்ராஜெயா (26), பெர்லிஸ் (2).