9,353 புதிய நேர்வுகள், இறப்பு எண்ணிக்கை 6,000-ஐ தாண்டியது

கோவிட் 19 | இன்று நாட்டில், 9,353 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும், இன்று 87 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 6,067 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில் இன்று, 5,910 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 959 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 451 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (4,277), கோலாலம்பூர் (1,398), மலாக்கா (835), நெகிரி செம்பிலான் (638), ஜொகூர் (399), கெடா (364), சரவாக் (352), சபா (251), பஹாங் (247), பினாங்கு (180), பேராக் (145), கிளந்தான் (89), லாபுவான் (85), திரெங்கானு (50), புத்ராஜெயா (39), பெர்லிஸ் (4).

மேலும் இன்று, 29 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 19 பணியிடத் திரளைகள் ஆகும்.