11,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள், 125 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று 11,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இது மலேசியாவில் பதிவான ஆக உயர்ந்த எண்ணிக்கை மட்டுமல்லாமல், முதல் முறையாக தினசரி புதிய நேர்வுகள் ஐந்து இலக்கங்களை இன்று எட்டியது.

மேலும், இன்று 125 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 6,385 பேர் பலியாகியுள்ளனர்.

இறந்தவர்களில் 17 வெளிநாட்டவர்களும் அடங்குவர். மருத்துவமனைக்கு வந்தவுடன் இறந்ததாக ஏழு பேர் அறிவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் இன்று, 5,990 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 972 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 456 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று பெர்லிஸில் புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (5,263), கோலாலம்பூர் (1,521), நெகிரி செம்பிலான் (1,033), கெடா (497), சரவாக் (472), ஜொகூர் (406), பேராக் (329), மலாக்கா (323), பஹாங் (321), சபா (239), பினாங்கு (234), கிளந்தான் (211), திரெங்கானு (93), புத்ராஜெயா (77), லாபுவான் (60).

மேலும் இன்று, 23 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 13 பணியிடத் திரளைகள் ஆகும்.

ஆக அதிகப் புதியத் திரளைகளை, ஜொகூர் (7), சிலாங்கூர் (4), கிளந்தான் (3), மலாக்கா, நெகிரி செம்பிலான், திரெங்கானு ஆகிய மாநிலங்கள் தலா 2 எனப் பதிவு செய்துள்ளன.