13,215 புதிய நேர்வுகள், 110 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 5,812 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும், இன்று 110 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 6,613 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில் இன்று, 6,095 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 885 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 432 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (6,120), நெகிரி செம்பிலான் (1,603), கோலாலம்பூர் (1,499), கெடா (695), ஜொகூர் (599), பினாங்கு (509), மலாக்கா (484), சபா (370), சரவாக் (363), பேராக் (344), கிளந்தான் (255), பஹாங் (222), திரெங்கானு (70), புத்ராஜெயா (53), லாபுவான் (26), பெர்லிஸ் (3).

மேலும் இன்று, 26 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 15 பணியிடத் திரளைகள் ஆகும். 3,168 திரளைகளில், 873 இன்னும் செயலில் உள்ளன.