இராஜமோகன் கருப்பையா காலமானார்

சி.ஐ.எம்.பி.பொருளகத்தின் முன்னாள் பணியாளரும் அதன் கால்பந்துக் குழுவின் முன்னாள் கோல் காவலரும் அப்போதைய நெடுந்தூர ஓட்டப்பந்தைய வீரருமான மோகன் ராஜ் எனப்படும் இராஜமோகன் கருப்பையா கோவிட் நோய்த் தொற்றினால் இன்று (17.7.2021) விடியற்காலை மரணமடைந்தார்.

இவர் மலேசியஇன்றுவில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் படைத்து வரும் இராகவன் கருப்பையா அவர்களின் அண்ணனாவார்.

காவல் துறையின் தன்னார்வலர் பிரிவில் பணியாற்றிய காலத்தில் சிறந்த குறி சுடும் வீரராகவும் விளங்கிய  அவருக்கு மனைவி  சகுந்தலாவும் மகள் ஸ்ரீ மீரா நாச்சியாரும் 3 பேரப்பிள்ளைகளும்  உள்ளனர்.

அன்னாரின் நல்லுடல் திங்கள்கிழமை 19ஆம் தேதி காலை 11 மணிக்கு JALAN LOKE YEW TRADITIONAL CREMATION CENTRE  மின் சுடலையில் தகனம் செய்யப்படும். தொடர்பு: 0193315564 (இராகவன்)

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்களுக்கு  மலேசியஇன்றுவின்  நிருவாகத்தினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

  • updated 312pm 18/7/21