10,710 புதிய நேர்வுகள், 153 மரணங்கள்

கோவிட் 19 | கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் மொத்தம் 10,710 புதியக் கோவிட் -19 நேர்வுகளைச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையில், 4,828 நேர்வுகளைப் பதிவு செய்த மாநிலமாக சிலாங்கூர் தொடர்கிறது.

இதற்கிடையில், 808 புதிய நேர்வுகளைப் பதிவு செய்து, ஜொகூர் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 28 நாட்களில், மாநிலத்தில் புதிய நேர்வுகள் உயர்ந்த போக்கைக் காட்டுகின்றன.

மேலும், இன்று 153 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 7,019 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில் இன்று, 5,778 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 909 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 445 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (4,828), கோலாலம்பூர் (945), ஜொகூர் (808), நெகிரி செம்பிலான் (771), கெடா (696), சபா (666), பேராக் (407), பஹாங் (369), பினாங்கு (295), மலாக்கா (289), சரவாக் (261), கிளந்தான் (146), திரெங்கானு (123), புத்ராஜெயா (51), லாபுவான் (50), பெர்லிஸ் (5).

மேலும் இன்று, 17 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 10 பணியிடத் திரளைகள் ஆகும்.