15,573 புதிய நேர்வுகள், 144 மரணங்கள்

கடந்த 24 மணி நேர நேரத்தில், 15,573 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை பதிவாகியுள்ள தினசரி நேர்வுகளில் இதுவே அதிகம். செயலில் உள்ள கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கையும் மிக உயர்ந்த அளவில் (147,386) உள்ளது.

மேலும், இன்று 144 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 7,718- ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் இன்று, 10,094 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 456 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

வகை அடிப்படையில் முறிவு

வகை 5 – (மோசமான நிலை, சுவாசக் கருவியின் உதவி தேவை) : 29 நேர்வுகள் (0.2%)

வகை 4 – (உயிர்வளி உதவி தேவை) : 74 நேர்வுகள் (0.5%)

வகை 3 – (நிமோனியா) : 102 நேர்வுகள் (0.6%)

வகை 2 – (இலேசான அறிகுறிகள்) : 7,095 நேர்வுகள் (45.6%)

வகை 1 – (அறிகுறிகள் இல்லை) : 8,273 நேர்வுகள் (53.1%)

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (7,672), கோலாலம்பூர் (2,063), கெடா (937), ஜொகூர் (722), நெகிரி செம்பிலான் (682), பினாங்கு (530), சபா (516), சரவாக் (461), பஹாங் (457), மலாக்கா (452), பேராக் (415), கிளந்தான் (372), திரெங்கானு (229), புத்ராஜெயா (41), லாபுவான் (21), பெர்லிஸ் (3).

மேலும் இன்று, 30 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 16 சமூகப் பரவலுடன் தொடர்புடையது, 7 பணியிடத் திரளைகள் ஆகும்.