184 இறப்புகள்; 15,902 புதிய நேர்வுகள்

கடந்த 24 மணி நேர நேரத்தில், 15,902 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை பதிவாகியுள்ள தினசரி நேர்வுகளில் இதுவே அதிகம். செயலில் உள்ள கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கையும் மிக உயர்ந்த அளவில் (153,633) உள்ளது.

மேலும், இன்று 184 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 9,471- ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் இன்று, 9,471 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 950 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 468 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

வகை அடிப்படையில் முறிவு

வகை 5 – (மோசமான நிலை, சுவாசக் கருவியின் உதவி தேவை) : 260 நேர்வுகள் (1.6%)

வகை 4 – (உயிர்வளி உதவி தேவை) : 129 நேர்வுகள் (0.8%)

வகை 3 – (நிமோனியா) : 127 நேர்வுகள் (0.8%)

வகை 2 – (இலேசான அறிகுறிகள்) : 6,901 நேர்வுகள் (43.4%)

வகை 1 – (அறிகுறிகள் இல்லை) : 8,485 நேர்வுகள் (53.4%)

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (7,351), கோலாலம்பூர் (2,406), கெடா (867), ஜொகூர் (804), சபா (712), மலாக்கா (631), நெகிரி செம்பிலான் (625), பினாங்கு (505), கிளந்தான் (502), பேராக் (469), பஹாங் (406), திரெங்கானு (267), சரவாக் (261), புத்ராஜெயா (59), லாபுவான் (30), பெர்லிஸ் (7).

மேலும் இன்று, 27 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.