அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் வீடற்றவர்களாகும் அபாயம்

வாஷிங்டன்: உலகம் முழுதும் கோவிட் பெருந்தொற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவில் சில மாகாணங்களில், 20 சதவீத மக்கள் வீட்டு வாடகையை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, தென் மாகாணங்கள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. 16 சதவீத மக்கள் வீட்டு வாடகை செலுத்தவில்லை.

வாடகை செலுத்த முடியாமல் தவித்த அமெரிக்கர்களை, அவர்கள் குடியிருக்கும் வீட்டிலிருந்து வெளியேற்ற நாடு முழுவதும் 11 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு நேற்று முடிவுக்கு வந்த நிலையில், வாடகை செலுத்தாத லட்சக்கணக்கானோர் வீட்டிலிருந்து வெளியேற மறுத்து, அரசிடம் உதவி கோரி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் வீட்டு வாடகை செலுத்துவதற்காக அரசு பில்லியன் டாலர்களை ஒதுக்கியது. ஆனால், இந்த நிதியை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடற்றவர்களாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வீட்டிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க பார்லிமென்டிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், குடியரசு கட்சி உறுப்பினர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் தடையை நீட்டிக்காமலேயே பிரதிநிதிகள் சபை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

dinamalar