தலீபான்கள் தாக்கினால் தக்க பதிலடி; ஜோ பைடன் கடும் எச்சரிக்கை

தலீபான்கள் தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன், ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் வந்துள்ளது. தலீபான்கள் கடுமையான சட்ட திட்டங்களை அமல்படுத்தக்கூடும் என்பதால் அங்கிருந்து ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.  இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தலீபான்களால் பாதிக்கப்படக் கூடியவர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தங்கள் நாட்டு வீரா்களை அந்த அமைப்பினா் தாக்கினால், அதற்கு பலத்த பதிலடி கொடுக்கப்படும்

அவா்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினாலோ, அமெரிக்க வீரா்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தாலோ அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்றார்.

dailythanthi