சிறிலங்கா பொதுஜன முன்னணியின் மே தினக் கூட்டத்தை காலிமுகத்திடலில் நடத்த தீர்மானம்!

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் மே தினக் கூட்டத்தை காலிமுகத்திடலில் நடாத்துவதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தீர்மானித்துள்ளார்.

அதன்படி காலிமுகத்திடல் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு மாநகர சபைக்குத் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பதைக் காட்டும் விதமாக மாபெரும் கூட்டத்தைத் திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மே தின கூட்டத்துடன் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

 

IBC Tamil